விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் திங்களன்று (24.12.12) அனுஷ்டிக்கப்பட்டது.
காரியாபட்டி ஒன்றியச் செயலாளர் கரியனேந்தல் ராமமூர்த்தி தலைமையில் அதிமுக-வினர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நகர செயலாளர் விஜயன், காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி, பாலமுருகன், விவசாய பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி, கல்குறிச்சி முருகன், ஆவியூர் ஊராட்சிச் செயலாளர் கிருஷ்ணன், உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.